Wednesday 7 September 2011

anna hazare


கலக்கிக் கொண்டிருக்கிறார் அன்னா ஹஸாரே!
இந்தியன் படம் பார்க்கிற போது இப்படி ஒரு தாத்தா நிஜமாகவே உருவானால் பரவாயில்லையே என்று உங்களை மாதிரியே நானும் ஏங்கினேன்.
ஷிவ் கேராவின் ஃப்ரீடம் இஸ் நாட் ஃப்ரீ படித்துக் கொண்டிருக்கிறேன். தேர்தலில் வோட்டுப் போடுமுன் எல்லாரும் படிக்க வேண்டிய புத்தகம். அதைப் படிக்கிற போதும், ஏன் நம் நாடு இப்படி அழிந்து கொண்டிருக்கிறது, விடிவே இல்லையா என்கிற ஏக்கம் ஏற்படுகிறது.
அன்னா ஹஸாரே பற்றி தொலைக்காட்சியில் பார்த்ததும் சந்தோஷமாக இருக்கிறது. இவர் சுபாஷ் சந்திர போசின் இந்தியன் தாத்தா அல்ல, காந்தியின் இந்தியன் தாத்தா. ஆனால் அரசியல்வாதிகளின் ஆணவமும், மெத்தனமும் இவரை மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், Right To Information Act (RTI) வருவதற்குக் காரணமாக இருந்தவர்.
அன்னா ஹஸாரேக்கு பல்வேறு மாநிலங்களில் ஆதரவு தோன்றியிருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். கிரன் பேடி உள்ளிட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். தேசத்தில் நல்லது நடக்கிற வாய்ப்புக்கள் தெரிகின்றன.
லோக்பால் பில் என்றால் என்ன?
லோக்பால் என்பது ஏதாவது ஜவுளிக்கடையின் பேரா?
லோக்பால் என்பது உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.
எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.
42 வருஷங்களாகக் கிடப்பில் போடப்பட்ட இந்த விஷயத்தை உடனே முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதே அன்னா ஹஸாரேயின் கோரிக்கை.
முதலில் அன்னா ஹஸாரேயின் செயலை இம்மெச்சூர் என்று காங்கிரஸ் வர்ணித்தது. பிறகு கொஞ்சம் காத்திருக்க வேண்டும், உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டது. பிறகு வீரப்ப மொய்லி அவர்கள் அடுத்த பார்லிமெண்ட் செஷனில் கொண்டுவருகிறோம் என்று உறுதி அளித்தார். எதற்குமே அன்னா மசியவில்லை. ஷரத் பவார் லோக்பால் குழுவிலிருந்து ராஜினாமா செய்தார். ம்ஹூம்…..
மெச்சூராக இருப்பது என்றால் என்ன?
இந்தியாவின் கறுப்புப் பணம் கோடிக்கணக்கில் ஸ்விஸ் வங்கியில் இருப்பதும், நூறு வருஷத்து இந்திய பட்ஜெட் அளவுக்கு 2ஜியில் திருடப்பட்டிருப்பதும் தெரியவே தெரியாத மாதிரி உட்கார்ந்திருப்பதா?
அன்னா ஹஸாரேக்கு ஆதரவு தருவதாகச் சொல்லிக் கொண்டு வந்த அரசியல்வாதிகளை ஆட்டத்தில் சேர்க்கவில்லை மக்கள். உமாபாரதியையும், சௌதாலாவையும் அப்படியே வண்டியேற்றி அனுப்பிவிட்டார்கள்.
கிடைத்துவிட்டார் இரண்டாவது காந்தி.
அவரைப் பொன் போல் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.

Monday 18 July 2011

great bharath

அறுபத்துநான்கு கலைகள்

நம்மில் பலர் 64 கலைகள் உண்டு என அறிந்திருப்பீர்கள். ஆனால் அவற்றின் பெயர்களை நீங்கள் அறிவீர்களா?

இதோ உங்களுக்காக அன்னை சரஸ்வதி அருளும் அறுபத்துநான்கு கலைகளும்......

அறுபத்துநான்கு கலைகள்:

1 - அக்கர இலக்கணம்
2 - இலிகிதம்
3 - கணிதம்
4 - வேதம்
5 - புராணம்
6 - வியாகரணம்
7 - நீதி சாஸ்திரம்
8 - சோதிட சாஸ்திரம்
9 - தரும சாஸ்திரம்

10 - யோக சாஸ்திரம்
11 - மந்திர சாஸ்திரம்
12 - சகுன சாஸ்திரம்
13 - சிற்ப சாஸ்திரம்
14 - வைத்திய சாஸ்திரம்
15 - உருவ சாஸ்திரம்
16 - இதிகாசம்
17 - காவியம்
18 - அலங்காரம்
19 - மதுரபாடனம்
20 - நாடகம்

21 - நிருத்தம்
22 - சக்தபிரமம்
23 - வீணை
24 - வேணு
25 - மிருதங்கம்
26 - தாளம்
27 - அத்திர பரீஷை
28 - கனக பரீஷை
29 - இரத பரீஷை
30 - கஜ பரீஷை

31 - அசுவ பரீஷை
32 - இரத்தின பரீஷை
33 - பூ பரீஷை
34 - சங்கிராம இலக்கணம்
35 - மல்யுத்தம்
36 - ஆகருஷணம்
37 - உச்சாடனம்
38 - வித்துவேஷணம்
39 - மதன சாஸ்திரம்
40 - மோகனம்

41 - வசீகரணம்
42 - இரசவாதம்
43 - காந்தர்வவாதம்
44 - பைபீலவாகம்
45 - கௌத்துகவாதம்
46 - தாது வாதம்
47 - காருடம்
48 - நாட்டம்
49 - முட்டி
50 - ஆகாயப் பிரவேசம்

51 - ஆகாயமனம்
52 - பாகாயப் பிரவேசம்
53 - அதிரிச்சயம்
54 - இந்திர ஜாலம்
55 - மகேந்திர ஜாலம்
56 - அக்கினித் தம்பம்
57 - ஜலஸ்தம்பம்
58 - வாயுத் தம்பம்
59 - திட்டித் தம்பம்
60 - வாக்குத் தம்பம்

61 - சுக்கிலத் தம்பம்
62 - கன்னத் தம்பம்
63 - கட்கத்தம்பம்
64 - அவத்தைப் பிரயோகம்.

( நன்றி : மயூரமங்கலம்

a wonderful dream

இளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும்:
‘இந்தியா 2020  இல் வளர்ந்த நாடாக மாற வேண்டும்’ என்பதுதான், நம் நாட்டின் குறிக்கோள்.
வளமான நாடு என்றால் பொருளாதார வள மிக்க 100  கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நமது நாட்டின் இலட்சியம்.
‘இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை மாறி – நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி, உடைய நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை. இதற்குச் சந்தர்ப்பங்கள் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இளைய சமுதாயம், எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைய சமுதாயம் – நம் நாட்டின் ஓர் அரும் பெரும் செல்வமாகும்.
“2020  -   இல் எப்படி இந்திய ஒரு வளமான நாடாக மற்ற வேண்டும்” என்ற எண்ணத்தை, நான் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ள  விரும்புகிறேன்.
உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால் – உங்கள் செயல்கள் ஒன்றுபட்டால், ‘வளமான இந்தியா உருவாக வேண்டும்’ என்ற இலட்சியம் நிறைவேறும். அந்த இலட்சியம்  என்ன?
ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா!
1 . கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும்,சமூக – பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
2 . சுத்தமான தண்ணீரும், அனைவருக்கும் தேவையான எரிசக்தியும் – எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் நாடாக மாற்ற வேண்டும்.
3. விவசாயம், தொழில்கள், சேவைத்துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
4. சமூக பொருளாதார வேறுபாடுகளை மீறி – பண்பாடு நிறைந்த ஒரு தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
5. விஞ்ஞானிகளுக்கும், அறிவார்ந்த வல்லுனர்களுக்கும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக – ஏற்ற ஓர் இடமாக – இந்தியாவை நாம் மாற்ற வேண்டும்.
6. வேறுபாடு இல்லாமல், தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான உஊழல்ற ஆட்சிமுறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
8. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு,கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும் குழைந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதயத்தில் இருக்கும் யாரும், ‘நாம் தனிமைப்படுத்தப் பட்டுவிட்டோம்’ என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
9. ஓர் இனிமையான வளமான பாதுகாப்பு மிகுந்த அமைதியான சுகாதாரமான வளமிக்க வளர்ச்சி பாதையை நோக்கிப் பீடு நடை போடக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்திச் செல்லக் கூடிய தலைவர்களைப் பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும்.
சுவாமி விவேகானந்தரின் கனவு:
இப்படிப்பட்ட இந்தியாவை நாம் படைக்க வேண்டுமானால் – எழ்ச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் இலட்சியம்.
“எழுச்சி மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும்” என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் கனவு. சுவாமி விவேகானந்தர் விரும்பிய அப்படிப்பட்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் தாங்கள் எதிர்காலம் பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும். என் முன்னாள் பல காட்சிகள் தோன்றுகின்றன.
ஒரு காட்சியில் 20 வயதிற்குள் இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். அவர்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல கல்வியின் பயனாக – அவர்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாகவும், பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டிற்கு நல்ல குடிமகன்களாகவும் திகழ வேண்டும்.
‘இளைய சமுதாயத்தை, எப்படி அறிவார்ந்த சமுதாயத்திற்கு அழைத்து செல்வது?’ என்பது மிகவும் பெரிய ஒரு பணி.
“அறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன? அதை அடைய வேண்டும் என்றால், அதற்கு உரிய அறிவின் இலக்கணம் என்ன?” என்று, இப்போது பார்ப்போம்.
அறிவின் இலக்கணம்
அறிவின் இலக்கணம் என்ன தெரியுமா? அறிவின் இலக்கணம் என்று சொல்லப்படுவது எது? அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அதற்கு உரிய ஒரு சந்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அறிவு = கற்பனைச் சக்தி + மனத்துய்மை + மனஉறுதி.
கற்பனைச் சக்தி
கற்பது கற்பனைச் சக்தியை வளர்க்கிறது,
கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறமையைத் தூண்டுகிறது,
சிந்தனை அறிவை வளர்க்கிறது,
அறிவு உன்னை மகானாக்குகிறது.
கற்பனைச் சக்தி உருவாவதற்குக் குடும்பச் சூழ்நிலையும், பள்ளிச் சூழ்நிலையும் தான் மிகவும் முக்கிய காரணங்களாக அமையும். அந்தச் சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும்? ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனத்தூய்மை இருக்க வேண்டும்.
மனத்தூய்மை
உங்களையெல்லாம் இங்கு பார்க்கும்போது, எனக்கு ஒரு தெய்விகப் பாடல் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைத் திரும்பிச் சொல்வீர்களா? பசி நேரமா? மிகவும் பசியாக இருக்கிறதா?
நான் சொல்வதை நீங்கள் சொல்வீர்களா?
(குழுமியிருந்த மக்கள், “சொல்கிறோம்” என்று கூறினார்கள்.)
(அதைத் தொடர்ந்து டாக்டர் கலாம், பின்வரும் பாடலை ஒவ்வொரு வரியாகக் கூறினார். அவர் கூறியதை, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திருப்பிக் கூறினார்கள்.)
எண்ணத்தில் தூய்மை இருந்தால்,
நடத்தையில் அழகு மிளிரும்.
நடத்தையில் அழகு மிளிர்ந்தால்,
குடும்பத்தில் சாந்தி நிலவும்.
குடும்பத்தில் சாந்தி இருந்தால்,
நாட்டில் சீர்முறை உயரும்.
நாட்டில் சீர்முறை உயர்ந்தால்,
உலகத்தில் அமைதி நிலவும்.
(இப்போது டாக்டர் கலாம் கூறுவதைக் குழுமியிருந்தவர்கள் திருப்பிச் சொல்லவில்லை. டாக்டர் கலாம் உரையைத் தொடர்கிறார்.)
‘எல்லாவற்றிற்கும் அடிப்படை மனத்தூய்மை’ என்பதை, இந்த சிறிய கவிதை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.
மனத்தூய்மை எங்கிருந்து வரும்? இதை நாம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும்.
அவர்கள் யார்? அவர்கள் 1 . தாய், 2 .தந்தை, 3 .ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியவர்கள்தான்.
மனஉறுதி
(இப்போது மாநாட்டில் குழுமியிருந்தவர்கள், டாக்டர் கலாம் சொல்வதைத் திருப்பிச் சொல்கிறார்கள்.)
“புதிய எண்ணங்களை உருவாக்கும் மாருதி இன்று என்னிடம் மலர்ந்திருக்கிறது.’எனக்கு’ என்று ஒரு புதிய பாதையை உருவாக்கி, அதில் நான் பயணம் செய்வேன். ‘முடியாது, முடியாது, முடியாது’ என்று எல்லோரும் சொல்வதை, ‘என்னால் செய்ய முடியும்’ என்ற மனஉறுதி என்னிடம் உருவாகிவிட்டது.
“‘புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை என்னால் செய்ய முடியும்’ என்ற மனஉறுதி, என்னிடம் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. இந்த மன உறுதிகள்  அனைத்தும் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரமாகும்.”
“‘இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மன உறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து  வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன்’ என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும்.”
(இவ்விதம் அனைவரும் சொல்லி முடித்த பிறகு, டாக்டர் கலாம் தன் சொற்பொழிவைத் தொடர்கிறார்.)
இளைய பாரதத்தினாய் வா, வா, வா!
நண்பர்களே! ‘உள்ளத்தில் உறுதி வேண்டும்’ என்று சொன்னேன்.
அந்த மனஉறுதி எப்படி வரும்? யார் மூலம் வரும்? நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவை மனதை உறுதி பெற வைக்கும். இந்த மனஉறுதி – ‘நாம் எந்தக் காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும்’ என்ற உறுதியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது.
மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள் – நீங்கள் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள்.
‘ஆதாவது, 2020 – க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும்’ என்ற இலட்சியத்தை நாம் அடைய வேண்டுமானால் – அது இந்தியாவின் 54  கோடி இளைஞர்களின் பங்களிப்புடன்தான் சாத்தியமாகும்.
அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, முதலில் அறிவார்ந்த இளைஞர்களை நாம் தயார் செய்ய வேண்டும்.
இளைஞர்களின் பொன்னான நேரம் – நல்ல திறமையை, நல்ல அறிவை,நல்ல ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும்.
எனவே இத்தகைய இளைஞர்களைச் செம்மைப்படுத்தும் முயற்சிகள் வெற்றியடைவதற்கு என் நல்வாழ்த்துகள்.  
                                                                                 -டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

all are actors

எது பகுத்தறிவு ?

தேசிய அளவிலான அல்லது மனிதகுலம் முழுமைக்குமே உரியதான பழைய காட்டுமிராண்டித்தனமான மூட நம்பிக்கைகள்;குடும்பம், நண்பர் நாடு,நாகரிகம்,சாஸ்திரங்கள்,பால் வேறுபாடு என்று ஏதோதோ சம்பத்தப்பட்ட மூட நம்பிக்கைகள் எல்லாம் நம்மைக் கட்டியுள்ளன. இதில் அறிவைப்பற்றி நாம் பேசுகிறோம்! அறிவுபூர்வமாகச் சிந்திப்பது எதோ ஒரு சிலர் மட்டுமே. ‘எதையெடுத்தாலும் நம்ப நான் தயாராக இல்லை.இருளில் உழல நான் தயாராக இல்லை. நான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்’ என்று பலர் சொல்வதைக் கேட்கிறோம்.அவ்வாறே ஆராயவும் மனிதன் தலைபடுகிறான்.
ஆனால் அவன் நெஞ்சோடு இறுகக் கட்டியனத்துள்ள பொருட்களையெல்லாம் அந்த ஆராய்ச்சி நொறுக்கித் தூள்தூளாக்கும்போது ‘இனி தாங்காது! எனது லட்சியங்களை உடைத்தெரியும்வரை ஆராய்ச்சி என்பது சரிதான், அத்தோடு நின்றுவிட வேண்டும்’ என்கிறான். இவன் ஒரு போதும் ஞானியாக மாட்டான். இந்த வாழ்க்கை என்றல்ல , இனி வரப்போகும் வாழ்க்கைகளிலும் அவன் தன தலைகளைச் சுமந்தே செல்கிறான். மரணத்தின் ஆதிக்கத்தில் அவன் மீண்டும் மீண்டும் வருகிறான் .இத்தகையோர் ஞானயோகத்திற்குதகுதியானவர்கள் அல்ல. பக்தி,கர்மம்,ராஜயோகம் என்று அவர்களுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. ஆனால் ஞானயோகம் அவர்களுக்கு இல்லை.
மிகவும் துணிவுடையவர்கள் மட்டுமே இந்தப் பாதையைப் பின்பற்ற முடியும் என்பதை முதலிலேயே உங்களுக்குச் சொல்லி, உங்களைத் தயார்படுத்த நான் விரும்புகிறேன், கோயிலை நம்பாதவனும், எந்த மதப்பிரிவையும் சாராதவனும், ‘எதையும் நம்பமாட்டேன்’ என்று சொல்லித்திரிபவனும் பகுத்தறிவுவாதி என்று எண்ணிவிடாதீர்கள். அப்படி இல்லவேயில்லை, அப்படியெல்லாம் பிதற்றித் திரிவது இன்று ஒரு வீரச் செயலாகக் கருதப்படுகிறது.
பகுத்தறிவுவாதியாக இருப்பதற்கு, அவநம்பிக்கை மட்டுமின்றி அதற்கு மேலும் பல வேண்டும். அறிவுபூர்வமாக ஆராய்வதுடன், அந்த ஆராய்ச்சி இட்டுச் செல்கின்ற வழியில் போவதற்கான துணிவு வேண்டும்.
இந்த உடம்பு ஒரு பொய்த்தோற்றம் என்று உங்கள் பகுத்தறிவு உங்களுக்கு கூறினால், உடம்பை விட்டுவிட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? சூடு, குளிர் என்பன வெல்லாம் வெறும் புலன் மயக்கங்களே என்று உங்கள் பகுத்தறிவு உங்களிடம் சொல்கிறது.பயமின்றி அவற்றைத் தாங்கிக்கொள்ள உங்களால் முடியுமா? புலன்கள் மனத்திற்குக் கொண்டுவருகின்ற அறிவு எல்லாமே பொய் என்று பகுத்தறிவு உங்களிடம் சொன்னால் புலனறிவை மறுக்க உங்களிடம் துணிவு இருக்கிறதா? இருக்குமானால் நீங்கள் ஒரு பகுத்தறிவுவாதி.
பகுத்தறிவையும் நம்பி, உண்மையையும் கடைப்படிப்பது என்பது மிகவும் கடினமானது. மூடத்தனமாக எதையாவது பின்பற்றுபவர்கள் அல்லது அரை ஆஷாடபூதிகள் – இவர்களால்தான் இந்த உலகமே நிறைந்திருக்கிறது. இந்த வேஷதாரிகளைவிட முட்டாள்களும் மூடர்களும் எவ்வளவோ மேல்! அவர்கள் நல்லவர்கள்.
-சுவாமி விவேகானந்தர்  

success

விவேகானந்தரின் வீர முரசு – வீர இளைஞருக்கு

வீரர்களுக்கே முக்தி எளிதாகக் கிடைக்கிறது ,பேடிகளுக்கு அல்ல. வீரர்களே, கச்சையை வரிந்துகட்டுங்கள். மகாமோக மாகிய எதிரிகள் உங்கள் முன் உள்ளார்கள்.பெருஞ் செயல்களுக்குத் தடைகள் பல என்பது உண்மைதான், என்றாலும் இறுதி வரை விடாமல் முயலுங்கள். மோகமாகிய முதலையிடம் சிக்கிய மனிதர்களைப் பாருங்கள். அந்தோ,இதயத்தைப் பிளக்கவல்ல அவர்களின் சோகக்  கூக்குரலைக் கேளுங்கள். வீரர்களே!

கட்டுண்டவர்களின் தலைகளை வெட்டி எறியவும், எளியவர்களின் துயரச் சுமையைக் குறைக்கவும், பாமரர்களின் இருண்ட உள்ளங்களை ஒளிபெறச் செய்யவும் முன்னேறிச் செல்லுங்கள். ‘அஞ்சாதே அஞ்சாதே ‘ என்று முழங்குகிறது வேதாந்த முரசு. பூமியில் வசிக்கின்ற மனிதர்கள் அனைவருடைய இதய முடிச்சுக்களையும் அது அவிழ்த்து எறியட்டும்!

எழுந்திருங்கள், எழுந்திருங்கள், நீண்ட இரவு கழிந்து கொண்டிருக்கிறது, பகற்பொழுது நெருங்கிக் கொண்டிருக்கிறது, அலை எழுந்துவிட்டது, அதன் பெருவேகத்தை எதிர்த்து நிற்க எதனாலும் முடியாது. என் இளைஞர்களே,வேண்டுவதெல்லாம் உற்சாகமே !

நம்புங்கள், நம்புங்கள், ஆணை பிறந்துவிட்டது, இறைவனின் கட்டளை பிறந்துவிட்டது— பாரதம் முன்னேறியே ஆக வேண்டும், பாமரர்களும் ஏழைகளும் நலம் பெற வேண்டும். இறைவனின் கையில் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி கொள்ளுங்கள், ஆன்மீகக் கருவிகளாக இருப்பதற்காக மகிழ்ச்சி  கொள்ளுங்கள்.

உன்னிடம் நேர்மை உள்ளதா? உயிரே போனாலும் நீ சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? உன்னிடம் அன்பு உள்ளதா? அப்படியானால் பயப்படாதே, மரணத்திற்கும் அஞ்ச வேண்டாம். என் பிள்ளைகளே, முன்னோக்கிச் செல்லுங்கள். உலகம் முழுவதும் ஒளியை எதிர்பார்த்து நிற்கிறது, ஆவலுடன் காத்து நிற்கிறது. அந்த ஒளி இந்தியாவிடம் மட்டுமே உள்ளது.

என் மகனே, உறுதியாகப் பற்றி நில்.உனக்கு உதவுவதற்காக யாரையும் லட்சியம் செய்ய வேண்டாம். மனித உதவிகள் அனைத்தையும்விட இறைவன் எல்லையற்ற மடங்கு பெரியவர் அல்லவா? புனிதனாக இரு. இறைவனிடம் நம்பிக்கைவைத்திரு, அவரையே எப்போதும் சார்ந்திரு—- நீ சரியான பாதையில் போகிறாய்; உன்னை எதுவும் எதிர்த்து நிற்க முடியாது.

நீங்கள் உண்மையிலேயே என் குழந்தைகளானால் எதற்குமே அஞ்ச மாட்டீர்கள் எதற்காகவும் நிற்க மாட்டீர்கள். சிங்கங்களெனத் திகழ்வீர்கள். நாம் இந்தியாவையும், ஏன், உலகம் முழுவதையுமே விழித்தெழச் செய்தாக வேண்டும் கோழைத் தனம் உதவாது. முடியாது என்பதை நான் ஏற்றுக்   கொள்வதில்லை. புரிகிறதா? உயிரே போவதானாலும் உண்மையைப் பற்றி நில்லுங்கள்.

‘ஓளி மிக்கவனே, எழுந்திரு. எப்போதும் தூயவனே எழுந்திரு. பிறப்பு இறப்பு அற்றவனே எழுந்திரு. எல்லாம் வல்லவனே, எழுந்து உனது உண்மை இயல்பை வெளிப்படுத்து. இந்த அற்ப நிலைகள் உனக்குத் தகுந்தவை அல்ல’ என்று சொல்லுங்கள்.

ஒழுக்க நெறியில் நில். வீரனாக இரு. முழுமனத்துடன் வேலை செய். பிறழாத ஒழுக்கம் உடையவனாக இரு. எல்லையற்ற துணிவு உடையவனாக இரு. மதத்தின் கொள்கைகளைப் பற்றி உன் மூலையைக் குழப்பிக் கொள்ளாதே. ஒவ்வொருவரையும் நேசிக்க முயற்சி செய்.

வஞ்சனையால் பெரும் பணி எதையும் செய்ய இயலாது. அன்பாலும் உண்மையை நாடுவதாலும் பேராற்றலாலும் தான் பெரும் செயல்கள் நிறை வேற்றப் படுகின்றன. எனவே உனது ஆண்மையை வெளிப்படுத்து.

எனது துணிவுடைய இளைஞர்களே, நீங்கள் பெரும் பணிகளைச் செய்ய பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குறிப்பைக் கண்டு நடுங்க்காதீர்கள்; வானத்தில் முழங்கும் இடியோசைக்கும் அஞ்ச வேண்டாம்; நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

நண்பா, ஏன் அழுகிறாய்? உனக்குள் எல்லா சக்தியும் உள்ளது. பலசாலியே,உனது எல்லாம் வல்ல இயல்பை வரவழை. மூவுலகும் உனது காலடியில் அமரும். வெல்வது ஆன்மா ஒன்றே, ஜடமல்ல. தங்களை உடம்பாகக் கருதுகின்ற முடர்கள் தான், ‘நாங்கள் பலவீனர்கள்’ என்று கதறுவார்கள். நாடு வேண்டுவது துணிச்சலும் விஞ்ஞான அறிவும் தீரமும் பேராற்றலும் அளவில்லா ஊக்கமுமே. பேடித்தனம் உதவாது. சிங்கத்தின் தீரமுள்ள செயல் வீரனையே திருமகள் நாடுவாள். பின்னால் பார்க்க வேண்டியதே இல்லை. முன்னே செல்லுங்கள்! எல்லையில்லாத வலிமையையும் எல்லையில்லாத ஊக்கமும் எல்லையில்லாத தீரமும் எல்லையில்லாத பொறுமையும் நமக்கு வேண்டும். அப்போது தான் பெரும் பணிகளை ஆற்ற இயலும்.

வலிமையின்மையே துயரத்திற்கு ஒரே காரணம். நாம் பலவீனர்களாக இருப்பதால் கெட்டவர்களாகிறோம். நம்மிடம் பொய்யும் திருட்டும் கொலையும் வேறு பாவச் செயல்களும் இருப்பதற்குக் காரணம் நமது பலவீனமே. நாம் துன்பமடைவது நமது பலவீனத்தாலேயே. நாம் இறப்பதும் நமது பலவீனத்தால்தான்.நம்மைப் பலவீனர்களாக்க ஒன்றும் இல்லாதபோது மரணமும் இல்லை, துயரமும் இல்லை.

நமது நாட்டிற்கு இப்போது வேண்டியது இரும்பை ஒத்த தசைகளும் எக்கைப்போன்ற நரம்புகளுமே. எதனாலும் தடைபடாத,உலகின்   விந்தைகளையும் மறை பொருள்களையும் ஊடுருவிப் பார்க்கவல்ல, கடலின் அடியாழம்வரை செல்ல நேரிட்டாலும் கருதியதை முடிப்பதற்கான ஆற்றல் பெற்ற, ஆன்மீக பலம் கொண்ட மனங்களே இப்போதைய தேவை.

லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.

ஆம்! உங்கள் இயல்பை மட்டும் உணர்ந்துவிட்டால் நீங்கள் தெய்வங்களே. உங்களை இழிவு படுத்துவதாக எப்போதாவது எனக்குத் தோன்றுமானால், அது உங்களை மனிதர் என்னும் போதுதான்.

முதலில் நாம் தெய்வங்களாவோம். பிறகு பிறரும் தெய்வங்கலாபாத் துணை செய்வோம். ‘ஆகுக, ஆக்குக’—- இதுவே நமது தாரக மந்திரம் ஆகட்டும்.

எழுந்திருங்கள், உழையுங்கள். இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு? உலகில் வந்துவிட்டீர்கள். அதற்கு அறிகுறியாக ஏதேனும் விட்டுச்செல்லுங்கள்.இல்லாவிட்டால், உங்களுக்கும் மரங்கள் மற்றும் கற்களுக்கும் என்ன வேறுபாடு? அவையும் தோன்றுகின்றன, கெடுகின்றன, மறைகின்றன.


உனக்குள் இருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்து. அதைச் சுற்றி ஒவ்வொன்றும் அதற்கு இசைவாக ஒழுங்கு படுத்தப்படும்.இறக்கும் வரை பணிசெய். நான் உன்னுடன் உள்ளேன்; நான் போனபின், எனது ஆன்மா உன்னுடன் உழைக்கும். இந்த வாழ்வு வரும், போகும். செல்வமும் புகழும் போகமும் சிலநாட்களுக்கே. உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறந்தாலும், உண்மையைப் போதித்துக்கொண்டே செயல்களத்தில் உயிரை விடுவது நல்லது.மிக நல்லது.

india

இந்தியத்தாய் நாட்டின் இளைய தலைமுறைக்கு இனிய வணக்கம். வீரம் மிக்க மண் வீழ்ந்து கிடக்கிறது. மகிமை மிக்க மனது மயங்கி மண்டியிட்டுக்கிடக்கிறது. கேட்பாரற்ற நிலம் போல எவன் எவனோ ஆக்கிரமிக்கிறான் எங்கள் மண்ணோடு மக்களையும். கனவு காண்கிறது கடமை மிக்க கண்கள். வாலிபர்களை வளைப்பதே வேலை என்று வரிந்து கட்டிக்கொண்டு அலைகிறது அரசியல் குள்ளநரிக்கூட்டம். இன்னும் எத்தனையோ சொல்வதற்கு... யார் இருப்பார் கேட்பதற்கு?